நடத்தையில் சந்தேகம்: நர்சை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர்…!!

Read Time:1 Minute, 59 Second

201609041747445423_Suspicious-behavior-nurse-stabbed-a-young-man-who-tried-to_SECVPFபெரியகுளம் வடகரை டி.ஆர்.வி.நாயுடு தெருவை சேர்ந்தவர் ஜவஹர்(35). இவரது மனைவி தேவி(29). அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். தேவி அனைவரிடமும் சிரித்து பேசும் பழக்கம் உடையவர். இதனால் மனைவி நடத்தையில் ஜவஹருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவர்களிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

ஜவகரின் சொந்த ஊர் ஆணைமலையான் பட்டியாகும். மனைவி நடத்தை அவருக்கு தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தியதால் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று மனைவியிடம் கூறினார். இதனை தேவி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜவஹர் கத்தியால் மனைவியை குத்தினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்றினர். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெரியகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஜவஹரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது: பார்வையாளர்கள் ஏமாற்றம்…!!
Next post மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்…!!