மராட்டியத்தில் 5 இளம்பெண்கள் உள்பட 6 பேர் குளத்தில் மூழ்கி பலி…!!
மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள நாக்பூர் மாவட்டத்தில் ஹிங்கானா ஹெக்சில் உள்ள கிராமம் சவாங்கி தியோலி என்ற கிராமம் உள்ளது.
நாளை வினாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப் பட இருக்கிறது. இந்த கிராமத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் ஹர்தாலிகா பூஜை நடைபெறும். இந்த பூஜையை முன்னிட்டு மந்தா நாகோஸ் (45), பிரியா ராட் (17), ஜானவ்ஹி சவுத்ரி (13), பூஜா தத்மால் (17), பூணம் தத்மால் (18), பிரணாலி ராட் (16) ஆகியோர் வீட்டருகே இருந்த குளத்திற்குச் சென்றனர்.
அப்போது ஒருவர் கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளனர். நீச்சல் தெரியாத அவர் நீரில் தத்தளிக்க கரையில் நின்ற மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது ஒருவர்பின் ஒருவர் குளத்தில் விழுந்து உயிரை இழந்துள்ளனர்.
அவர்களுடைய உடல்களை போலீசார் குளத்தில் இருந்து வெளியே எடுத்து உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளம் பெண்கள் உள்பட 6 பேர் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating