ஐதராபாத்தில் 6 கிலோ எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி…!!
ஐதராபாத்தில் உள்ள நிலோபர் ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷபானா பேகம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறிப்பபட்டது. அதனால் டாக்கடர் குழந்தை நலமாக இருக்கிறதா? என்பதை அறிய ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்போது, வயிற்றில் இருந்த குழந்தையின் எடை 5 கிலோவிற்கு மேல் இருப்பது தெரியவந்தது.
பின்னர் இந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை எடைபோட்டு பார்த்த டாக்டர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஏனென்றால், அந்த குழந்தை 6 கிலோ இருந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 6 கிலோ எடையில் குழந்தை பிறப்பது அரிதிலும் அரிது என்று அவர்கள் கூறினார்கள்.
இந்தியாவில் பொதுவாக 2.5 கிலோவில் இருந்து 3.5 கிலோ எடை வரையிலும் குழந்தைகள் பிறக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 4 கிலோ எடை வரை பிறக்கும். ஆனால், இந்த குழந்தை 6 கிலோ எடை வரை உள்ளது.
தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாவும் மருத்துவர்கள் கூறினர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating