அதிரடி சுற்றி வளைப்பு – பயணித்த வண்டியுடன் போதை பொருட்களையும் கைப்பற்றிய பொலிஸார்…!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 24வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
போதைவஸ்து மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் கல்முனை பிரதேசத்திலிருந்து போதை மாத்திரைகளுடன் வாழைச்சேனை பிரதேசத்திற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த இளைஞர் கிரான் பிரதேசத்தில் வைத்து சோதனையிடப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மற்றும் 5 மில்லிகிராம் கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கர்பலா வீதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யபட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கஞ்சாவுடன் நடமாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து தடுப்புப்பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து, காத்தான்குடி கர்பலா வீதியில் வைத்து 4340 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுளார்.
சந்தேக நபரான இளைஞர் 18 வயதான காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating