கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகள் சிக்கின…!!
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளையும் மற்றும் வாகனச் சாரதியினையும் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இன்று காலை கூலர் வகை வாகனமொன்றில் கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் வைத்து தர்மபுரம் பொலிஸாரால் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிடிக்கப்பட்ட வாகனத்தில் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பெறுமதியான இருபத்தைந்து தேக்கு குற்றிகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும்,
நாளையதினம் குறித்த வாகன சாரதியினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப் படுத்த உள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating