உங்களை குழந்தைகள் நேசிக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க…!!
உங்கள் கைப்பிடித்து வளர்ந்த உங்களின் செல்லக்குட்டிகள் வேகமாக வளர்ந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அது ஒரு கனவாக நமக்கு தெரியும்.
குழந்தைகள் வளர்ந்து எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல பெற்றோர்களாகிய நாமும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய கால தலைமுறைகளை சமாளிக்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக பழக வேண்டும்.
இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பிணைப்புகள் வலுவாகி பிரிவினை உண்டாகாமல் தடுக்கும்.
பெற்றோர்கள் தங்களின் இளம் குழந்தைகளின் தலைமுறைக்கு மாறுவது எப்படி என்று தெரிந்துக் கொள்ள இதோ உங்களுக்கான டிப்ஸ்!
குழந்தைகளின் இளம் பருவத்தினை திரும்பப் பெற இயலாது என்பதை நினைவில் கொண்டு, அவர்கள் சீக்கிரமாக பெரியவர்களாக வேண்டும் என்று தூண்டாமல், அவர்களின் குழந்தைத்தனங்களை ரசித்துப் பாருங்கள்.
ஒருசில குழந்தைகள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அன்பு என்று தவறாக புரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை புரியச் செய்து, அவர்கள் மீது உண்மையான அன்பினைக் காட்டுங்கள்.
குழந்தைகளுக்கு நம் மனதில் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிகாட்டி, நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அனுபவித்து ரசித்துக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களின் ஆதரவினால் தான் குழந்தைகள் இந்த உலகிற்கு வந்தது என்பதை மனதில் கொண்டு, குழந்தைகள் செய்யும் அனைத்து செயல்களிலும் பெற்றோர்கள் துணை புரிந்து, பெற்றோர்களின் ஆதரவு எப்போதும் குழந்தைகளுக்கு உள்ளது என்பதை புரிய வையுங்கள்.
குழந்தைகளின் எதிர் காலங்கள் பற்றிய ஆசைகளை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள்.
குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசுவதை தவிர்த்து, அவர்களுக்கு நல்ல செயல்பாடுகளை கற்றுக் கொடுங்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating