இலங்கை மலேரியா அற்ற நாடு ; உலக சுகாதார ஸ்தாபனம்…!!
மலேரியா அற்ற நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதன் ஊடாக இலங்கை உண்மையான குறிப்பிடக்கூடிய இலக்கை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கெத்ரபால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அடிமட்ட சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் மற்றும் பொதுச் சுகாதார துறையில் வியத்தகு வெற்றியை ஈட்டும் போது அனைத்து சமூகங்களினதும் பங்களிப்பை இது நிரூபித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பிராந்திய பணிப்பாளர் கூறியுள்ளார்.
மலேரியாவை ஒழிக்கும் இலங்கையின் நடவடிக்கை கடினமானதாகவும் சிறந்த அளவுகோல்கள் மற்றும் கொள்கைகளை கொண்டதாகவும் அமைந்திருந்ததாக பூனம் கெத்ரபால் சிங் சுட்டிக்காட்டினார்.
மலேரியா தொடர்பான விடயங்களில் ஸ்ரீலங்காவின் சுகாதார துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating