விஷ ஊசி விடயம் கண்டறியப்படுமா? ; எம்.ஏ.சுமந்திரன்…!!

Read Time:2 Minute, 11 Second

index-28புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இது வரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமது கண்டனத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

இதேவேளை வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது சிறந்த விடயமல்ல என்று தெரிவித்துள்ள அவர்,அதேபோல் வடக்கில் பலாத்காரமாக புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை மலேரியா அற்ற நாடு ; உலக சுகாதார ஸ்தாபனம்…!!
Next post உளுந்தூர்பேட்டை அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் பலி…!!