திருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்ம மரணம்…!!

Read Time:3 Minute, 2 Second

201609051726292122_2-student-mystery-death-in-thirukovilur_SECVPFவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டை யில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. 92 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் அய்யனார் (வயது 8) இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அதிகாலை அய்யனார் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றான். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.

விடுதி கண்காணிப்பாளர் உடனே அய்யனாரை திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அய்யனார் இறந்த சிறிது நேரத்தில் அம்மன் கொள்ளைமேடு கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (11), அய்யனாரின் அக்காள் சுப்புலட்சுமி (11) ஆகியோருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களை திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ராஜதுரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சுப்புலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளியின் அருகே புதர் மண்டிக் கிடக்கிறது. எனவே அதிலிருந்து வெளியேறிய வி‌ஷப்பூச்சிகள் கடித்ததில் மாணவன் அய்யனாரும், ராஜ துரையும் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஒரே நாளில் 2 மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீயெல்லாம் ஒரு பொண்ணாம்மா?… விட்டால் கடையையே காலி பண்ணியிருப்பா போல…!! வீடியோ
Next post உங்களை குழந்தைகள் நேசிக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க…!!