20 அடி பள்ளத்தில் வீட்டின் மேல் விழுந்த கார்..!!
பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியில் பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி தியத்தலாவ காகொல்ல பகுதியில் 20 அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மதில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (06) 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating