திருமலை – கொழும்பு ரயில் மீது மீண்டும் கல்லெறி தாக்குதல்…!!
அண்மைக்காலங்களாக புகையிரதத்தின் மீது அடையாளம் தெரியாதோர் கல்லெறித்தாக்குதலை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தடுக்கும் வகையில் இலங்கை புகையிரத திணைக்களமும், பாதுகாப்பு படையினரும்பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்திய பின்பு தாக்குதல் சம்பவங்கள்எதுவும் பதிவாகியிருக்கவில்லை.
எனினும் நேற்றைய தினம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தபால்புகையிரதம் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புகையிரதத்தின் யன்னல்களின் கண்ணாடிகளுக்கு பலத்த சேதம்ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு வாரங்களுக்குள் குறித்த புகையிரதத்தின் மீது நடத்தப்பட்ட 3வதுதாக்குதல் இதுவென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating