கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு…!!
மன்னார் பிரதேசசபை பிரிவுக்கு உட்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 3,628 ரூபாய் பெறுமதியான சத்துணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேசசபையின் உபஅலுவலக பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சத்துணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபையின் கீழ் உள்ள 34 கிராமங்களில் இருந்து குறைந்த வருமானமுடைய தலா ஒரு கர்ப்பிணித்தாய் என்ற அடிப்படையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியால் தெரிவு செய்யப்பட்டு, வழங்கப்பட்ட பட்டியலிற்கு அமைய குறித்த சத்துணவு பொதிகள் மன்னார் பிரதேசசபையால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating