எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி..!!
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள கிலின்ட்டோ சிறைச்சாலையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கைதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானதாக முன்னர் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று எத்தியோப்பியா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிலின்ட்டோ சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து தீயில் இருந்து தப்பிக்க முயன்று, தள்ளுமுள்ளில் சிக்கியும், கூட்டத்தில் மிதிபட்டும் 23 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating