பாகிஸ்தானில் நிலநடுக்கம்: பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் காயம்…!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.7 அலகுகளாக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பட்டாகிராம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்ததாக அம்மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating