சுரங்கப்பாதையில் செயினை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்…!!
ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாதையில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.
பழைய வண்ணாரப் பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவி. இவர் ராயபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை 3 மணி அளவில் மாதவி ஸ்டேன்லி ஆஸ்பத்திரி அருகே உள்ள சுரங்க பாதையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் மாதவி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்தான்.
மாதவியும் நகையை பிடித்து இழுத்து கொண்டு கொள்ளையனுடன் போராடினார். அதில் செயின் அறுந்து கொள்ளையன் கையில் 3 பவுனும், மாதவி கையில் 2 பவுனும் சிக்கியது. 3 பவுன் நகையுடன் கொள்ளையன் ஓடினான். அவனை பிடிக்க மாதவியும் துரத்தி சென்றார். கொள்ளையன் வண்ணாரப்பேட்டை ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டான்.
இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதே சுரங்கபாதையில் கடந்த வாரம் மல்லிகா என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து இந்த சுரங்க பாதையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் போலீசார் இங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating