காது குத்தும் போது இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க…!!

Read Time:3 Minute, 1 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா வைத்து தாய் மாமாவின் மடியில் உட்கார வைத்து காது குத்துவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள விழா.

குழந்தைகளுக்கு காது குத்தும் போது நாம் ஒருசில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், என்வே காது குத்தும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
காது குத்திய முதல் ஐந்து மாதங்களுக்கு தொடர்ச்சியாக கம்மல்களை குழந்தைகள் அணிந்திருக்க வேண்டும்.

காது குத்தும் கருவிகள் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தையின் காது குத்திய இடங்களில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு அணியக் கூடிய காதணிகள் தரமானதாக இருக்க வேண்டும்.

குழந்தகளுக்கு காது குத்தியவுடன் தரமான ஆண்டிசெப்டிக்கை பயன்படுத்திக் கழுவ வேண்டும்.

காது குத்துவதற்கு முன் குழந்தைகளின் காது குத்தும் இடத்தில் கட்டிகள் மற்றும் புண்கள் இருந்தால் அந்த இடத்தினை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு இரும்பினால் அலர்ஜி போன்று ஏற்பட்டால், காதணிகள் அணிவதன் மூலம் அலர்ஜியை தடுக்கலாம்.

குழந்தைகள் அணிந்திருந்த காதணிகளை மற்றவர் பகிர்ந்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு குழந்தைகள் மருத்துவமனையில் சென்று காதுகுத்துவது மிகவும் நல்லது.

காது குத்தும் போது, சரியாக பார்த்து குத்த வேண்டும் இல்லையென்றால், அது குழந்தைகளின் காதில் அதிக வலியை ஏற்படுத்தும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 மாத குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது…!!
Next post காணாமல்போன வர்த்தகர் மறைந்திருந்தபோது கைது…!!