கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 55 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் இன்று பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் 43 வயதுடைய வீரய்யா செல்வமணி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இன்று காலையில் தோட்ட வேலைக்கு சென்று பகல் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால் பகலுணவிற்காக இவரை தேடிச்சென்ற வேளையிலேயே கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பிரதேசவாசிகளால் அவரை மீட்டெடுத்த போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மேற்படி நபர் வலிப்பு நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரின் உடல் வைத்தியப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்தவுடன் உரையாடிய சம்பந்தன்…!!
Next post சாரதியும் நடத்துனரும் தாக்கியதில் இளைஞன் வைத்தியசாலையில்…!!