சாரதியும் நடத்துனரும் தாக்கியதில் இளைஞன் வைத்தியசாலையில்…!!

Read Time:3 Minute, 0 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)யாழ் காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவ நோக்கி சென்ற பேரூந்தில் பயணித்த இளைஞன் மீது சாரதி மற்றும் நடத்துனர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம், நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவ நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் வவுனியா செல்வதற்காக பயணித்த இளைஞன் பேரூந்து வேகமாக பயணிப்பதை உணர்ந்து சாரதியிடம் வேகத்தை குறைத்து ஓடுமாறும் கேட்டுள்ளார்.

மேலும், விபத்து நேர்ந்தால் பயணிகளின் நிலை தொடர்பிலும் எடுத்துக்கூறியதுடன் பிறிதொரு பேரூந்துடன் போட்டிபோட்டு ஓடாதீர்கள் எனவும் இதனால் பயணிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த சாரதியும் நடத்துனரும் தமக்கு அறிவுரை கூறவேண்டாம் என தெரிவித்து இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இளைஞனை நடுவீதியில் இறக்கிவிட்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த இளைஞன் பிறிதொரு பேரூந்தியில் ஏறி வவுனியாவிற்கு வந்து பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை காயமடைந்த இளைஞன் வவுனியாவில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவலை வழங்கியதையடுத்து உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இளைஞரின் நண்பர்கள் ஒன்றுதிரண்டு பேரூந்தை வவுனியாவில் வைத்து மறித்து பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இதனால் பேரூந்தில் பயணித்த பயணிகள் இரவு வேளையில் கடும் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

இதனையடுத்து பொலிஸாரும் தமது செயற்பாட்டை விரைந்து மேற்கொண்டமையினால் சாரதி மற்றும் நடத்துனர்களை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!
Next post மகளை அடித்துக் கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு…!!