மகளை அடித்துக் கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு…!!

Read Time:2 Minute, 8 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் தனது வளர்ப்பு மகளை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாயாரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவர் மதம் மாறியமை தொடர்பில் கடந்த மே மாதம் 31ஆம் திகதியன்று குறித்த 55 வயதுடைய தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்டில் பலகையால் மகள் மீது தாய் தாக்கியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தாய் (வயது 55) கைது செய்யப்பட்டு நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

14 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டு, விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாரதியும் நடத்துனரும் தாக்கியதில் இளைஞன் வைத்தியசாலையில்…!!
Next post பஸ்ஸில் இருந்து விழுந்த நடத்துனர் பலி..!!