ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை…!!
டயகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்காக நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2003.08.06 அன்று இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பத்தனையிலிருந்து 10 கி.மீ தூரத்திலிருக்கும் டயகமவில் சந்தனம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவியான திருமாள் ராஜேஸ்வரி வழங்கிய சாட்சியின் அடிப்படையிலேயே குறித்த மூவருக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெருமாள் சிவலிங்கம் (60), பாலகிருஷ்ணன் அசோவரன் (32), மற்றும் மகாலிங்கம் சிவனேசன் (37) ஆகியோருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating