விடுதியில் தங்கியிருந்த நபர் மாயம்…!!
மருதானை பிரதேச விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடுதியின் உரிமையாளரால் நேற்றைய தினம் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த குறித்த நபர் வியாபார நிமித்தம் கொழும்பு வந்து குறித்த விடுதியில் அடிக்கடி தங்கிச் செல்பவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு விடுதியில் தங்குவதாக வந்த இவர் திடீரென காணாமல் போயுள்ளதாகவும், அவர் தங்கி இருந்த அறையிலிருந்து காணாமல் போனவரின் பை ஒன்று மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காணாமல் போன நபர் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating