யாத்திரைக்கு சென்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியது…!!
மாத்தளையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று காலை வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல எனுமிடத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முச்சக்கர வண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் பயணித்துள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating