அமெரிக்க பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை…!!
அமெரிக்காவில் உள்ள டெக்காஸ் மாகாணத்தில் அல்பின் நகரில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு வந்த மாணவி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவியை சுட்டாள்.
அதில் அவள் காயம் அடைந்தாள். அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாள். காயம் அடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது உயிருக்கு ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதில் மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating