இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: 2 பேர் கைது…!!
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் சிலர் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உளவுத்துறையின் மூலம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் லண்டனின் மேற்கு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் 19 வயதான வாலிபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும், 20 வயதான மற்றொரு வாலிபர் பயங்கரவாத தாக்குதலுக்கு தேவையான நிதி உதவியை அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating