பணம் திருடியதாக கூறி 8–ம் வகுப்பு மாணவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்…!!
வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 13, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது தாயார் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கவிதா தனது பாட்டி வீட்டில் தங்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரின் தோழியான குப்பம்மாளுக்கு கே.வி.குப்பத்தில் திருமணம் நடந்தது. இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் 7–ந் தேதி ஒரு வேனில் கே.வி.குப்பம் சென்றனர்.
அப்போது 18 வயது பெண், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த மாணவி கவிதாவை தன்னுடன் திருமணத்துக்கு அழைத்து சென்றார். அவர் தனது உடமைகளுடன் ஒரு பையை அந்த சிறுமியிடம் ஒப்படைத்து உள்ளார்.
அந்த பையில் ரூ.2,500 ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை திருமணம் முடிந்து பார்த்தபோது பையில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியை திருமணத்துக்கு அழைத்துச்சென்ற பெண் தனது கிராமத்துக்கு வந்ததும், தனது உறவினரான ஹேமலதாவிடம் பணம் காணாமல் போன சம்பவத்தை கூறினார்.
அதைத்தொடர்ந்து ஹேமலதா, அந்த மாணவியை அழைத்து நீதான் பணத்தை எடுத்தாய், அதைக் கொடுத்துவிடு என்று மிரட்டியதுடன் மாணவியை தனது வீட்டு எதிரே உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஹேமலதாவின் கணவர், மனைவியை கண்டித்து மாணவியின் கட்டுகளை அவிழ்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி கவிதா, நேற்று ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating