கோவளம் அருகே 6-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை…!!
கேரள மாநிலம் கோவளம் ஆழ்கரை பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 51). கூலி தொழிலாளி.
இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மனைவி சென்று விட்டார்.
இவரது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் அந்த மாணவி மட்டும் இருப்பது வழக்கம்.
இதை நோட்டமிட்ட சந்திரபாபுவுக்கு விபரீத எண்ணம் ஏற்ட்டது.
சம்பவத்தன்று அந்த மாணவி தனியாக இருந்த போது அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனது வீட்டிற்கு சந்திரபாபு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து அந்த மாணவியை அவர் கற்பழித்துவிட்டார்.
இதில் அந்த மாணவி மயங்கி விழுந்தார். ஆனால் சந்திரபாபு அந்த மாணவி இறந்துவிட்டதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த மாணவியை தூக்கிக்கொண்டு அவரது வீட்டின் பின்புறம் சென்று பள்ளம் தோண்டி புதைக்க முயற்சி செய்தார். அவர் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தபோது அந்த மாணவி மயக்கம் தெளிந்து எழுந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பயத்தில் அவர் அலறினார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
இதனால் பயந்துபோன சந்திரபாபு தனது வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவை பூட்டிக்கொண்டார். உடனடியாக பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று சந்திரபாபு வீட்டுக் கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சந்திரபாபு தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating