4 மாத குழந்தையை 17 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற தாய்… காரணம் தெரிந்தால் கொந்தளிச்சிடுவீங்க…!! வீடியோ

Read Time:3 Minute, 8 Second

murder_baby_001-w245இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் படித்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் நேகா கோயல் (வயது 35). இவரது கணவரும் வசதி படைத்த தானிய வியாபாரி.

இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று நேகா ஆசைப்பட்டார். நீண்ட காலம் ஆகியும் நேகா கருத்தரிக்கவில்லை. இதனால் செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் கருவுற்றார். குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என்று சிறப்பான பூஜைகள் செய்தார். ஆனால் 2-வதும் பெண்ணாக பிறந்ததால் நேகா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானார்.

பெண் குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி திடீர் என்று குழந்தை மாயமானது. கணவர் மற்றும் குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கம் இருப்பவர்களிடமும் குழந்தை மாயமானதாக நேகா கூறினார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வந்து வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் பயன்படுத்தப்படாத ஏ.சி. மெஷினில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை பிணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். குழந்தையின் கழுத்து உள்பட 17 இடங்களில் கத்தி குத்து இருந்தது.

எனவே குழந்தையை வீட்டுக்குள் இருந்த யாரோ ஒருவர்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று கருதிய போலீசார் தாய் நேகாவிடம் விசாரணை நடத்தினர். நேகா படுக்கை அறை, குளியல் அறையில் ரத்தம் சிதறி கிடந்தது. அந்த அறைகளில் பதிவான கைரேகை மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் குழந்தையை கொன்றது நேகா என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நேகாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆண்குழந்தை ஏக்கத்தில் இருந்த தனக்கு பெண்ணாக பிறந்ததால் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 வயதை நெருங்கும் போது பெண்கள் கணவனிடம் அதிகம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்…!!
Next post மதுவில் முதலிடம் பெற்ற நாம் கல்வியைக் கடைசியாக்கினோம்…!!