நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ள புகையிரத போக்குவரத்து…!!
கட்டுநாயக்க மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத வீதி பழுது பார்க்கும் வேலைத் திட்டத்தின் காரணமாக புத்தளம் புகையிரத போக்குவரத்து நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 4 மணிக்கு, கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் வரை மற்றும் காலை 3.50 மணிக்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நுர்நகர் தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதம் பயணிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிலாபத்தில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு மருதானை நோக்கி பயணிக்கும் புகையிரதம் நாளைய தினம் மாத்திரம் 5.35 மணிக்கு பயணிக்கும் என புகையிரத கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating