வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு…!!
திருகோணமலை இலிங்க நகர் பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மீனவர் ஒருவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் தொடர்ந்து தேடிய போது அவர் காணியில் உள்ள வடிகானுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating