திண்டுக்கல் அருகே வியாபாரி வெட்டிக் கொலை…!!
திண்டுக்கல் தெற்கு போலீஸ் சரகம் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். அவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). திருமணமாகாத இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஊர் ஊராக சென்று கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை கடைகளில் வழங்குவது வழங்குவது வழக்கம்.
அதன்படி தட்சிணாமூர்த்தி நேற்று இரவு வியாபாரம் முடிந்து வசூலான பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுமுன்பு வந்து இறங்கினார். அப்போதுது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனையடுத்து கொலை வெறிக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணயில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கொலையுண்ட தட்சிணாமூர்த்தியின் தங்கை கீதா லட்சுமி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அலெக்ஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த விவகாரம் சண்முகவேல் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கீதா லட்சுமியிடம் நீ உனது காதலன் அலெக்ஸ்சிடம் பேசக்கூடாது என தடைவிதித்தனர். இதனால் மனமுடைந்த கீதா லட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இதன் காரணமாக தட்சிணாமூர்த்திக்கும், அலெக்ஸ்சுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்த போதும் பிரச்சினை புகைந்து கொண்டே இருந்தது.
எனவே இந்த முன்விரோதத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating