ஒடிசா முதல்-மந்திரி வீடு அருகே தீக்குளித்த ஊர்க்காவல் படை வீரர் மரணம்..!!
ஒடிசாவின் பூரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஹலாடிபதியா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் ஹதி (வயது 45). ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த இவர், அந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த 2013-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் விரக்தியில் இருந்த சந்தீப் கடந்த 2-ந் தேதி முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் வீடு அருகே சென்று திடீரென தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீட்டு கட்டாக்கில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரில் பதற்றம் ஏற்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சந்தீப்பின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களுடன் உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் சந்தீப்பின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating