அதிபரின் தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!
தென்பகுதியில் வலஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மாணவி தமது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டு வந்த சொக்கலேட்டுக்களை ஏனைய மாணவர்களுடன்பகிர்ந்த போது அவற்றின் உறைகள் வகுப்பில் வீசியெறியப்பட்டிருந்தன.
இதன்போது பாடசாலையின் அதிபர் மாணவியின் கைகளை நீட்டுமாறு கோரி, பிரம்பால்அடித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவி வீசிக் கிடந்த சொக்கலேட் உறைகளை பொறுக்கிகுப்பைக்கூடைக்குள் எறிய முனைந்த போது, அவரின் முதுகுப் புறத்தில் பிரம்பால் அடித்தஅதிபர், இது பிறந்த நாள் பரிசு என்று கூறியதாக மாணவி முறையிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating