முதியவர் ஒருவரை அச்சுறுத்திய நபர்களுக்கு ஏற்பட்ட கதி…!!

Read Time:2 Minute, 7 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கிளிநொச்சி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதியவர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு 09-09-2016 தொடக்கம் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு தலா பத்தாயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் வீட்டையும் அதன் காணியையும் இராணுவத்திடமிருந்து பெற்றுத்தருவதாககூறி, அதற்காக ஒருதொகைப் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள குறித்த ஐந்து பேரும் முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்களை கிளிநொச்சி பொலிசார் கைது கடந்த 2011ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த ஐந்து பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கு தலா பத்தாயிரம் ரூபா நட்டஈடு செலுத்து மாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் வாகனம் செலுத்திய 10 பேர் தருமபுரத்தில் வசமாக சிக்கினர்…!!
Next post வங்காளதேசம்: தொழிற்சாலை தீவிபத்தில் 32 பேர் உடல் கருகி பலி…!!