டிரைவரை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு ஓட்டலில் சாப்பிட அனுமதி மறுப்பு…!!
வேலை விஷயமாக கொல்கத்தாவிற்கு வந்து தங்கியிருந்த திலாஷி ஹேம்னானி என்ற பெண், தனக்கு உதவியாக இருந்த கார் டிரைவருக்கு விருந்து அளித்து உபசரிக்க விரும்பினார். இதற்காக கொல்கத்தாவின் பார்க் தெருவில் உள்ள மிகப் பழமையான பிரபல ஓட்டலுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், அவர்களை மேலும் கீழுமாக பார்த்த ஓட்டல் ஊழியர்கள் நீண்டநேரம் காக்க வைத்துள்ளனர்.
மேஜைகள் காலியாக இருந்தபோதும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிப் போன திலாஷி, இதுபற்றி சற்று கோபத்துடன் கேட்டபோது, ஊழியர்கள் கூறிய விஷயம் அதிர்ச்சியும் வேதனையும் அடைய வைத்தது. திலாஷியுடன் சென்ற டிரைவரின் எளிமையான உடை மற்றும் அவரது தோற்றம் தான் இதற்கு காரணம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அப்போது, உங்கள் ஓட்டலில் சாப்பிடுவதற்கென்று ஏதாவது உடை கட்டுப்பாடு உள்ளதா? என திலாஷி கேட்டுள்ளார். அப்படியெதுவும் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நிலைமையை உணர்ந்த டிரைவர், திலாஷியிடம் சென்று ‘இங்கு நாம் சாப்பிட முடியாது’ என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டமான அனுபவத்தை திலாஷி தனது பேஸ்புக்கில் பதிவு செய்து, நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating