பயணிகளுடன் விபத்தை சந்திக்கவிருந்த படகு…. நொடிப்பொழுதில் தப்பித்த அதிர்ச்சி தருணம்…!! வீடியோ
லண்டனில் உள்ள நதியில் எழுப்பப்பட்டிருந்த சுவரில் மோதவிருந்த படகு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
Canary Wharf Pier என்ற இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில், 151 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த அந்த படகின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
மேலும், நதியின் பக்கவாட்டில் எழுப்பப்பட்டிருந்த குறுக்குசுவர் மீது மோதுவது போன்று வந்து ஒரு நொடியில் சுதாரித்துக்கொண்ட படகு ஓட்டுநர், கவனமாக படகினை திசை திருப்பியுள்ளார்.
ஆனால், இதன் ஆபத்து அறியாத மக்கள் படகு சவாரியினை சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருந்தனர், ஆனால் படகில் பயணம் செய்த மாலுமிகள், நிலமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு படகினை கவனமாக கரை ஒதுக்கியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating