திருகோணமலையில் சிறுவனும் சிறுமியும் மாயம்…!!
திருகோணமலை – உப்புவெளி, மஹிந்தபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
11 வயதான சிறுவனையும் அவருடைய தங்கையான 09 வயதான சிறுமியுமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு செல்வதாக கூறிச்சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும், இதனையடுத்து பெற்றோர் உப்புவெளி பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating