4 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது…!!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த 2.615 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருட்களுடன்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண் 48 வயதான பொலியா நாட்டைச் சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 3 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருள் 4 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் இதற்கு முன்னரும் தென்னாபிரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating