காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு…!!

Read Time:3 Minute, 42 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர்.

9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காணாமந்போயுள்ள சிறுவனால் எழுதப்பட்டது என கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு

திருகோணமலை, கன்னியாப் பிரதேசம் உப்புவெளிப் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்த 9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அயலவர்கள் என்ற அடிப்படையில் வகுப்பு ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றபோதும் அங்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களாக வகுப்புக்கு செல்வதாக கூறியபோதும் அங்கு செல்லாமல், அருகில் உள்ள ஆற்றில் சென்று நீராடிவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் நீராடியதை உறவினர்கள் கண்டதை அடுத்து வீட்டுக்கு சென்றால், வீட்டார் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில், இருவரும் கடிதம் ஒன்றை குளித்த இடத்தில் வைத்துவிட்டு மட்டக்களப்புக்கு செல்லும் புகையிரதத்தில் ஏறி சென்றுள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை அவர்கள் காணாமல் போனதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து புகையிரதத்தில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐம்பது லட்சம் ஆசை காமிச்சும் அதுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா
Next post விபத்தால் பாலாக மாறிய கித்துல்கலை ஆறு..!!