விபத்தால் பாலாக மாறிய கித்துல்கலை ஆறு..!!
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கலை பகுதியில் பால் ஏற்றிச்சென்ற பவுசர் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கித்துல்கலை கலுபோத்தென்ன பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹற்றனிலிருந்து கேகாலை நோக்கி 4500 லீட்டர் பால் ஏற்றிச்சென்ற பவுசரே திடீரேன தடை இயங்காத நிலையில் மண்மேட்டில் மோதுண்டு பாதையிலேயே குடைசாய்ந்துள்ளது.
லொறியில் சிக்குண்ட நிலையில் சாரதியை பிரதேச மக்கள் பாதிப்பின்றி மீட்டதுடன் பால் கித்துல்கலை ஆற்றில் கலந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் குறித்த ஆற்றில் தண்ணீருடன் பால் கலந்து, பால் ஆறு போன்று காட்சியளித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான லொறியை அகற்றும் நடவடிக்கையில் கித்துல்கலை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating