முதுமைக் காலத்திலும் சொந்தக் காலில் நிற்கும் பாட்டி: இரக்கமே இன்றி அவரிடமும் பணம் பறித்த பொலிசார்…!! வீடியோ
கொள்ளையர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொலிசாரின் அடாவடித்தனங்கள் தான் இன்று அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டத்தையும், ஆயுதத்தையும் தம்முடனே கொண்டு நடமாடும் இவர்கள் தமக்கு ஏற்றவாறு மேற்கண்டவற்றை பயன்படுத்தி வாழ முனைகின்றனர்.
அதிலும் அன்றாட வாழ்விற்காக வியாபாரம் செய்பவர்களிடம் மாமுல் என்ற பெயரில் வாங்கப்படும் லஞ்சத்திற்கு ஒரு அளவே இல்லை.
இங்கும் மிகவும் வயதான மூதாட்டி ஒருவர் பழங்களை விற்று தனது அன்றான சீவியத்திற்கான பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். திடீரென அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறிதளவும் ஈவிரக்கமோ இல்லது வெட்கமோ இன்றி சன நடமாட்டத்திற்கு மத்தியிலும் அம் மூதாட்டியிம் கையை நீட்டி மாமுல் பெற்று செல்கின்றார்.
இவ்வாறான ஒரு சில பொலிசாரின் நடவடிக்கைகளே ஒட்டு மொத்த பொலிசாரின் அவமானத்திற்கு காரணம் என்பதை எப்போது புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating