உடனடியாக அமைச்சரவையை மீளமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…!!
உடனடியாக அமைச்சரவையை மீளமைத்து பயன்படாத அமைச்சர்களை விலக்கி விடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்களின் குழுக்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளன.
அத்துடன் வசீம் தாஜூதீன், லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிக்கொட ஆகியோர் தொடர்பிலான விசாரணையில் நீதிமுறைகளை துரிதப்படுத்துமாறும் சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.
பாரத லக்ஸ்மன் கொலை விசாரணையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, இலங்கையின் நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
நேற்று ஜனாதிபதியை இந்த குழுக்கள் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating