திருடிய நகையை அதே கடையில் விற்க முற்பட்டவர் கைது…!!

Read Time:3 Minute, 5 Second

download-1யாழ். அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகையினை யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றில் விற்க முற்பட்ட சந்தேக நபரொருவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் திங்கட்கிழமை(12) இடம்பெற்றது. யாழ்.மல்லாகம் கல்லாரைப் பகுதியினைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழ். மல்லாகம் கல்லாரைப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவர் அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் திருடியுள்ளார். திருடிய நகையினை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றிற்குக் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது அந்த நபர் கொண்டு சென்ற நகையினை வாங்கிப் பார்த்த கடை உரிமையாளர் ‘இது தன்னுடைய கடையில் விற்பனை செய்யப்பட்ட நகை என்பதைத் தனக்குள் புரிந்து கொண்டு ஏன் விற்கிறீர்கள்? பணத்துக்கு என்ன அவசியம்?’ என அவரிடம் துருவியுள்ளார்.

நகையினைத் திருடியவர் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான கருத்துக்களைத் தெரிவித்ததையடுத்து நகையின் உரிமையாளர்களுக்கு இரகசியமாகத் தொலைபேசி அழைப்பினை எடுத்த கடை உரிமையாளர் ” உங்களுடைய நகை திருடப்பட்டுள்ளதா? ” எனக் கேட்டுள்ளார்.

ஆம்… திருட்டுப் போயுள்ளது என மறுமுனையில் தெரிவிக்கவே அவர்களை நகைக் கடைக்கு வருமாறு நகைக் கடை உரிமையாளர் அழைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருடிய நகை கொண்டு வந்த நபரை மடக்கிப் பிடித்து வைத்திருந்த கடை உரிமையாளர் தெல்லிப்பழைப் பொலிஸாரை வரவழைத்துச் சந்தேகநபரைப் பாரப்படுத்தினார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேற்று வவுனியா வைத்தியசாலையில் ஓர் சம்பவம்…!!
Next post ஒருதலைக் காதல்!! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!