குப்பைத்தொட்டிகளாக மாறும் யாழ் குடாநாடு…!!

Read Time:2 Minute, 3 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3யாழ்.குடாநாட்டில் நகர்களை அண்டி காணப்படும் குளக்கரைகள் குப்பைத்தொட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதை அண்மைக் காலங்களாக காணக்கூடியதாக உள்ளது.

யாழ் மத்தியுஸ் வீதியில் அமைந்துள்ள குளத்தில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதினால் பெரும் அசெளகரியங்களை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதேவேளையில் அருகிலுள்ள கிணறுகள் ,தேவாலயம், பாடசாலைகள் என்பன இதன் காரணமாக மாசடைவதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது.

தற்போது இப்பகுதிகளில் அதிகளவில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் காகங்கள் மற்றும் விலங்குகள் ஒன்று கூடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு கவனிப்பாரற்று இந்த குளக்கரை இருப்பதனால் வீதிகளுக்கும் குப்பைகள் பரவி நீரில் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதியால் செல்லும் வேளையில் துர்நாற்றம் வீசுகின்றது.

எனினும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் பாடலுக்கு கருவறையில் கைத் தட்டிய குழந்தை- வீடியோ இணைப்பு…!!
Next post சந்திர கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு…!1