கிணற்றில் விழுந்து சிறுவன் பலி…!!
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்துஉயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன் என தெரியவந்துள்ளது.
கிணற்றில் விழுந்து கிடந்த தோடம் பழத்தை எடுப்பதற்காகச் சென்ற போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மெதியத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating