உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் 2 வருடத்திற்கு பின் விடுதலை…!!
சீனாவில் உளவு வேலைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இரண்டு வருடகாலமாக கைது செய்யப்பட்டிருந்த கனேடிய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சீன அரசாங்கத்தின் இரகசியங்களை ஒற்றறிந்த குற்றத்திற்காகவே இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்வதற்கு முன்னர் இந்த தம்பதிகள் வட கொரியா பகுதியில் வாழ்ந்தார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகதிகளுக்கு உதவுவதற்காகவே தாம் அங்கு தங்கியிருதோம் என குறித்த தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கனடாவின் பிரதமர் Justin Trudeau சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டதை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது விடுதலைக்கு உதவிய அனைவருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனாவின் போர் விமான ஆவணங்களை திருடி அமெரிக்காவிற்கு வழங்க முயற்சித்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating