டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!
டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி புறநகரில் அமன் விகார் என்றொரு பகுதி உள்ளது.
நேற்றிரவு அங்குள்ள முண்டக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 18 மற்றும் 17 வயதுடைய இரு இளம் பெண்கள், தங்கள் காதலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு 9 மணியளவில் அந்த இரு இளம் பெண்களும் காதலருடன் தனிமையில் இருப்பதை 5 வாலிபர்கள் ரகசியமாக நோட்டமிட்டபடி இருந்தனர். அப்போது 18 வயது பெண் தன் காதலருடன் மிகவும் தாராளமான நிலையுடன் காணப்பட்டார். அவரது காதலர் சில்மிஷம் செய்தபடி இருந்தார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த 5 வாலிபர்களும் அவர்களை சூழ்ந்தனர். அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக அடித்தனர். அது போல 17 வயது பெண்ணையும் அவரது காதலரையும் அடித்து உதைத்தனர்.
பிறகு இரு பெண்களையும் அவர்களது காதலர்களை கத்தி முனையில் மிரட்டி கடத்தி சென்றனர்.
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு 4 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு இரு இளம் பெண்களையும் 5 வாலிபர்களும் மாறி, மாறி கற்பழித்தனர். காதலர்களின் கண் எதிரில் இந்த கொடூரம் நடந்தது.
பிறகு 5 வாலிபர்களும், காதல் ஜோடிகளை எச்சரித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி இரு பெண்களும் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் அந்த 2 பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த பெண்கள் கும்பலாக கற்பழிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முண்டக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிந்தது.
போலீசார் அதிரடி வேட்டை நடத்தி 4 வாலிபர்களை கைது செய்தனர். ஒரு வாலிபர் மட்டும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating