பிரான்ஸில் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசிய 4 இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் பொலிசாரால் தேடல்..!! (வீடியோ & படங்கள்)

Read Time:2 Minute, 52 Second

timthumbமாவையின் கூட்டத்தில் கண்ணீர்ப்புகை எதிரொலி: பிரான்ஸ் பொலிசாரால் தேடப்படும் 4 இலங்கைத் தமிழர்கள்.. (வீடியோ & படங்கள்)

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள “காவாலித் தமிழர்கள்” நால்வர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக் கொண்டிருந்த போதே, அங்கு வந்திருந்த நான்கு பேர் நச்சுவாயு கலந்த சக்தி வாய்ந்த கண்ணீர்புகையை பிரயோகித்து பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரும் பிரான்ஸில் உள்ள “புலிகளின் முக்கியஸ்தரென தன்னைக் கூறிக் கொள்ளும்” கஜன் என்பவனின் ஏற்பாட்டில் தான் மண்டபத்திற்குள் நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை கருவையை தமது உடைகளுக்குள் மறைத்து கொண்டு வந்தார்கள் என்று பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் புலிகளின் “பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்” கூட இவர்களின் இந்த அநாகரிகமான செயல்பாட்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரனைகளை முன் எடுத்துள்ளதுடன், இதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டுமானால் வதிவிட உரிமை பறிக்ப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மேற்படி நால்வர் குறித்த தகவல் தெரிந்தோர், பிரான்ஸ் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

நன்றி-“அதிரடி” இணையம்

timthumb-1

timthumb-2

timthumb-3

timthumb-4

timthumb-5

timthumb-6

timthumb-7

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!
Next post ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…!! வீடியோ