ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 194 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
சாதாரண விமானம் ஒன்றில் எளிமையான முறையில் குறைந்த பிரநிதிகள் எண்ணிக்கையுடன் ஜனாதிபதி இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating