நிர்வாண காட்சிகள் வெளியானதில் கவலை இல்லை: ராதிகா ஆப்தே…!!
நடிகர் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ‘பார்ச்டு’ என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். இந்த இந்திப்படத்தில் அவர் அதுல் ஹூசைனுடன் தோன்றும் நிர்வாணக் காட்சிகள் இணைய தளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அது மட்டுமின்றி, ‘இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்கான வணிக தந்திரம்’ எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ராதிகா ஆப்தே பேட்டி அளித்தார். அப்போது அவர், “இது எனக்கு வருத்தம் தரவில்லை. அந்த காட்சிகள் வெளியானதால் நான் உடைந்து போக மாட்டேன். இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்” என கூறினார்.
மேலும், “அந்தப் படத்தில் எனது பாத்திரத்துக்கு அந்த நிர்வாண காட்சிகள் தேவை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்கள் அதைப் பேசியவிதம் தான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது” எனவும் கூறினார்.
“வெளியான காட்சிகள் முன்கூட்டியே கசிந்த காட்சிகள் அல்ல, இந்தப் படம் ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகி விட்டது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இந்தியாவில் 23-ந் தேதி வெளியாகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating