சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கென்யா மற்றும் சோமாலியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நேற்று சோமாலியா நாட்டு ராணுவ வீரர்கள் வந்த வாகனங்களை வழிமறித்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐந்து ராணுவ வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும், 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating